<bgsound loop='infinite' src='http://db.oruwebsite.com/Tamil/Songs/10%20-%20Devotional%20Songs/01%20Hindu%20Songs/29%20Kantha%20Guru%20Kavasam/Kantha%20Guru%20Kavasam.mp3'></bgsound> திருச்செந்தூர் சுப்பிரமணீயசுவாமி கோயிலில் புதியதாக எழிலுடன் ஆனந்த விலாச மண்டபம் | Tiruchendhur | திருச்செந்தூர்

திருச்செந்தூர் சுப்பிரமணீயசுவாமி கோயிலில் புதியதாக எழிலுடன் ஆனந்த விலாச மண்டபம்

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் வடபுறம் இருந்த ஆனந்த விலாச மண்டபம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இடிந்து போனது. இம் மண்டபத்தில் ஆவணி மற்றும் மாசித் திருவிழாக்களிலும்,7ஆம்,8ஆம் திருவிழாக் காலங்களில் சுவாமி சண்முகர் இந்த மண்டபத்திற்கு மகிழ்வுடன் எழுந்தருள்வார்.தற்போது இம்மண்டபத்தை சுமார் 30 லட்சம் மதிப்பீட்டில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது .இணை ஆணையர் அர.சுதர்சன் தலைமை தாங்கினார்.தக்கார் கோட்டை மணிகண்ட்டன் அடிக்கல் நாட்டினார்.கணபதி பூஜை,லட்சுமி பூஜை,வாஸ்து பிரம்மா பூஜை ஆகியவற்றுடன் கோயில் விதாயகர்த்தா சிவசுவாமி தீட்சிதர் ,சிருங்கேரிமடம் திருச்செந்தூர் கிளை நிர்வாகி காசிவிசுவநாதன்,கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடத்தி வைத்தனர்.விழாவில் யூனியன் தலைவர் ஹேமலதா லிங்ககுமார், பஞ்சாயத்து தலைவர் மு.சுரேஷ் பாபு,கோயில் அலுவலக கண்காணிப்பாளர் செல்வகுமாரி,ஸ்தலத்தார்கள் சபை தலைவர் குமார்,சோன கிருஷ்ணமூர்த்தி, திருக்கோயில் பணியாள்ர்கள் சங்கத் தலைவர் தோப்பூர் சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

0 comments:

Post a Comment

 
வாரந்தோறும் கூட்டுப்பிராத்தனை!!
நமது இனையதளத்தில்!!
Click here...