<bgsound loop='infinite' src='http://db.oruwebsite.com/Tamil/Songs/10%20-%20Devotional%20Songs/01%20Hindu%20Songs/29%20Kantha%20Guru%20Kavasam/Kantha%20Guru%20Kavasam.mp3'></bgsound> March 2012 | Tiruchendhur | திருச்செந்தூர்

முருகா சரணம்

வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட தீரவேல் செவ்வேள் திருக்கைவேல்-வாரி குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும் துளைத்தவேல் உண்டே துணை.

சண்முகா சரணம்

உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன் பின்னை ஒருவரையான் பின்செல்லேன்- பன்னிருகை கோலப்பா வானோர் கொடியவினை தீர்த்தருளும் வேலப்பா செந்திவாழ் வே

சரவணபவா சரணம்

அஞ்சு முகந்தோன்றின் ஆறு முகந்தோன்றும் வெஞ்சமரில் அஞ்சலென வேல்தோன்றும்-நெஞ்சில் ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும் முருகாவென்று ஓதுவார் முன்.

ஆறுபடைவேலா சரணம்

குன்றம் எறிந்ததுவும் குன்றப்போர் செய்ததுவும் அன்றங் கமரரிடர் தீர்த்ததுவும்-இன்றென்னைக் கைவிடா நின்றதுவும் கற்பொதும்பிற் காத்ததுவும் மெய்விடா வீரன்கை வேல்.

திருச்செந்தூர் கோயில் தேரோட்டம்


திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் மாசி திருவிழா தேரோட்டம்  நடந்தது. தினத்தந்தி அதிபர் பத்மஸ்ரீ டாக்ட்ர் பா.சிவந்தி ஆதித்தன் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.10.15மணிக்கு சுவாமி தேர் நிலைக்கு வந்தது.தொடர்ந்து 10.35மணிக்கு அம்பாள் தேர் நிலைக்கு வந்தது.தொடர்ந்து 10.35 மணிக்கு அம்பாள் தேர் இழுக்கப்பட்டது.4ரத வீதிகள் சுற்றி 11.30மணிக்கு அம்பாள் தேர் நிலையை வந்தடைந்தது.


 
வாரந்தோறும் கூட்டுப்பிராத்தனை!!
நமது இனையதளத்தில்!!
Click here...