<bgsound loop='infinite' src='http://db.oruwebsite.com/Tamil/Songs/10%20-%20Devotional%20Songs/01%20Hindu%20Songs/29%20Kantha%20Guru%20Kavasam/Kantha%20Guru%20Kavasam.mp3'></bgsound> January 2012 | Tiruchendhur | திருச்செந்தூர்

முருகா சரணம்

வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட தீரவேல் செவ்வேள் திருக்கைவேல்-வாரி குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும் துளைத்தவேல் உண்டே துணை.

சண்முகா சரணம்

உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன் பின்னை ஒருவரையான் பின்செல்லேன்- பன்னிருகை கோலப்பா வானோர் கொடியவினை தீர்த்தருளும் வேலப்பா செந்திவாழ் வே

சரவணபவா சரணம்

அஞ்சு முகந்தோன்றின் ஆறு முகந்தோன்றும் வெஞ்சமரில் அஞ்சலென வேல்தோன்றும்-நெஞ்சில் ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும் முருகாவென்று ஓதுவார் முன்.

ஆறுபடைவேலா சரணம்

குன்றம் எறிந்ததுவும் குன்றப்போர் செய்ததுவும் அன்றங் கமரரிடர் தீர்த்ததுவும்-இன்றென்னைக் கைவிடா நின்றதுவும் கற்பொதும்பிற் காத்ததுவும் மெய்விடா வீரன்கை வேல்.

கோயிலில் செய்ய வேண்டியது


[1] திருக்கோயிலில் ஸ்வாமிக்கு அபிசேகம் செய்யும் நேரத்தில் பிரதட்சணம் [வலம் வருதல்] கூடாது.
[2] கோயிலை ஒரு தடவை மட்டும் பிரதட்சணம் செய்யக் கூடாது.குறைந்தது மூன்று முறையாவது சுற்றி வர வேண்டும்.
[3] திருக்கோயில் மூடியிருக்கும் நேரத்திலும்,திருவிழாவில் சுவாமி வீதி உலாவரும் நேரத்திலும்,உள்ளே திரை போட்டிருக்கும் நேரத்திலும் கோயிலில் உள்ள தெய்வத்தைத் தரிசனம் செய்வதோ, பிரதட்சணம் வருதலோ கூடாது.
[4] கோயில்களில் திருவிழா நடக்கும் போது [கொடியேற்றம் முதல் கொடியிறக்கம் வரை]அதன் சுற்றுப்புறங்களில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது.
[5] ஒரு ஆலயத்தில் இருந்து கொண்டு மற்ற ஆலயத்தைப் புகழ்ந்து பேசக்கூடாது.

திருச்செந்தூர் கோயில் வேதபாடசாலை ரூ 2 1/2 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்டது


திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் பழமையான வேதபாடசாலை உள்ளது.இப்பாடசாலைக் கட்டடம் பழுதுபட்டதால் அதனை ரூ 2 1/2 லட்சம் செலவில் புதுப்பித்துள்ளனர்.இக்கட்டடத்தின் திறப்பு விழா நடைபெற்றது. கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன் புதுப்பிக்கப்பட்டக் கட்டடத்தைத் திறந்து வைத்தார்.

வென்றிமாலைக் கவிராயர்


வென்றிமாலைக் கவிராயர்


திருச்செந்தூரில் முருகனுக்குத் தொண்டு செய்யும் திரிசுதந்திரர் குடும்பத்தில் வென்றிமாலை பிறந்தார்.தொடக்கக் காலக்கல்வி கசந்தது.செந்திலாண்டவன் கோயிலைச் சுற்றுவது,முருகனின் நாமத்தை எந்நேரமும் கூறுவது,மனம் போலப் பாடுவது எனத் தொடர்ந்து வந்தார்.தந்தையின் கண்களுக்கு பொறுப்பற்றப் பிள்ளையாக வென்றிமாலைக் காட்சி அளித்தார்.வாழ்க்கையை நடத்துவதற்கு உதவியாக அமையுமென திருக்கோயில் மடப்பள்ளியில் கையாளாகச் சேர்த்து விட்டார்.முருகனின் பூஜைக்காக பிரசாதங்கலைச் சமைத்து வழங்கவேண்டியது இவரது பொறுப்பு.இவ்வாறிருக்கும்போது ஒருநாள் செந்திலாண்டவனைச் சிந்தித்து தியானத்தில் இருந்து விட்டார் வென்றிமாலை.பூஜைக்கு வேண்டிய பிரசாதம் தயாரிக்கப்படவில்லை. சண்முகருக்கு பூஜைக்கு வேண்டிய பிரசாதத்தை வாங்க வந்த நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.எதற்கும் உதவாதவன் என்று கூறி நையப்புடைத்து விரட்டி விட்டனர்.மனம் வருந்திய வென்றிமாலை கடற்கரையில் அமர்ந்து சிந்தித்தார்.இனி உயிரோடிருப்பதில் அர்த்தமில்லை என்று கடலில் விழுந்து உயிரை விடத் துணிந்தார்.அந்நேரம் நில் என்ற குரல் கேட்டது முதியவர் வடிவில் வந்த முருகன் வென்றிமாலையைத் தடுத்து,செவலூர் என்ற ஊரில் வாழும் கிருஷ்ண சாஸ்திரியைப் பார்,என்று கூறி மறைந்தார். வென்றிமாலை செவலூர் சென்று முருகனின் கட்டளையை சாஸ்திரிகளிடம் கூறினார்.மனம் மகிழ்ந்த சாஸ்திரி,தாம் வட மொழியில் பாடிவைத்திருந்த திருச்செந்தூர்மகாத்மியத்தை [திருச்செந்தூர் தலபுராணம்]தமிழில் பாடக் கூறினார்.எப்படிப் பாடுவேன்...ஏதோ நாவில் வந்ததைப் பாடி வந்தேன்.தமிழே சரியாக அறியாத நான் எப்படிப் பாடுவது...என்றார்.செந்திலாண்டவனை நினைத்துப் பாடு என்றார் சாஸ்திரி.முருகனை நினைத்துப் பாடலைத் தொடங்கினார்.வென்றிமாலையின் அறிவிலும் நாவிலும் முருகன் குடி கொண்டான்.சிவபெருமானை முதலாவதாக வைத்து 899 பாடல்களை இனிய,எளிய தமிழில் பாடினார்.வென்றிமாலையின் கவித்திறன் கண்ட கிருஷ்ண சாஸ்திரி ‘வென்றிமாலைக் கவிராயர்‘என்ற பட்டத்தை வழங்கினார்.தாம் பாடிய திருச்செந்தூர் தல புராணச் சுவடிகளுடன் திருச்செந்தூர் வந்தார் தாமியற்றியப் பாடல்களை அரங்கேற்றப் போகிறேன் என்று கூறினார்.அவருடைய உறவினர்கள் வென்றிமாலைக்குப் பித்துப் பிடித்து விட்டது என்று கேலி பேசினர்.கோயில் நிர்வாகிகளிடம் அரங்கேற்றம் செய்வது குறித்து அனுமதி வேண்டினார்.சமையல் கூடத்தில் வேலை செய்தவனாவது கவிதை பாடுவதாவது என்று புறம் தள்ளினர் கோயில் நிர்வாகிகள்.தனக்கும் தனது திருச்செந்தூர் தல புராணநூலுக்கும் நேர்ந்த அவமானத்தால் மனமுருகி அழுதார்.தலபுராணச் சுவடிகளை கடலினுள் எறிந்து விட்டு தவமிருந்தார்.நீண்டநாள் தவத்தால் முருகனடி சேர்ந்தார்.கடலில் இட்ட ஏடு நீரோட்டத்தை எதிர்த்துச்சென்று ஈழநாட்டில் பனைமுனை என்ற இடத்தில் கறை ஏறியது.அவ் ஏடுகள் முருகனடியார் ஒருவரது கையில் கிடைத்தது.அந்நூலையும் அதன் பொருளையும் அறிந்த அடியார் மெய்சிலிர்த்தார் முருகன் தனக்குக் கொடுத்த பிறவிப் பயன் என்று கொண்டாடினார்.தினமும் ஏடுகளுக்குப் பூ இட்டு தூப தீபம் காட்டி பூஜை வைத்து வழிபட்டார்.அந்நாளில் கொடிய நோய் ஒன்று அவ்வூரில் பரவியது.பலர் மாண்டனர்.ஆனால் திருச்செந்தூர் தல புராணம் இருந்த அடியார் வீட்டிலும், அத்தெருவிலும் நோய் புகவில்லை ; பரவவில்லை.இவ்வற்புதம் ஈழ நாடு முழுவதும் பரவியது.வென்றிமாலைக் கவிராயர் திருச்செந்தூரில் அரங்கேற்ற நினைத்த தலபுராணம் அயல் நாடுகளில் மக்களின் உள்ளங்களில் அரங்கேறியது.திருச்செந்தூரில் வேதமோதும் திரிசுதந்திரர் குடும்பத்தில் தோன்றிய வென்றிமாலை முருகனின் அருள் தொண்டராவார்.

முருகனின் தேரோடும் அழகு


ஸ்ரீ சனீஸ்வரபகவான் ஆலயம் SANEESWARA BAGWAN -THIRUNALLAR-609607


ஸ்ரீ சனீஸ்வரபகவான் ஆலயம் SANEESWARA BAGWAN -THIRUNALLAR-609607 
ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வர பகவான் தேவஸ்தானம் திருநள்ளாறு-609607
நடை திறப்பு காலை 6.00 மணி முதல் பகல் 12.30 வரை
              மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 வரை
பூஜைகள் ஆறுகால பூஜை
திருவிழாக்கள் 
             வைகாசி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் கொடியேற்றம். பின்பு 18 நாட்கள் பெருவிழா எனப்படும் பிரமோத்சவம். புரட்டாசி பெளர்ணமி விசேசம் தரும் நவராத்திரி மற்றும்விநாயகர் சதூர்த்தி.அனைத்து சனிக் கிழமைகள் மற்றும் பிரதோசம் நாட்களில் தீர்த்தத்தில் மூழ்கி வழிபட்டால் மேன்மை பெறுவது உறுதியாகும்.
சிறப்பு
சனி தோச நிவர்த்தி தரும் பரிகார தலம் ஆகும்.சனி பார்வையில் உள்ள பக்தர்கள்,இக்கோயிலுக்கு வந்து எள்ளுடன் கூடிய தீபம் ஏற்றி அன்னதானம் செய்தால் சனீஸ்வர பகவானின் அருள் முழுமையாக கிடைக்கும்.
செல்லும் வழி -கும்பகோணத்திலிருந்து 59 கி.மீ. காரைக்காலிலிருந்து 5 கி.மீ
கோயிலின் தொலைபேசி -04368-236530 பேக்ஸ்-236504
One of the most popular Shani Temples in India is located at Thirunallar near Karaikal a part of Union Territory Pondicherry. There is a misconception that this Shani Shrine, or Saturn temple, is located in Tamil Nadu. The greatness of the Thirunallur temple is attributed to the unique idol of Lord Shani as he stands blessing the devotee – abhayahastham. This is a very rare phenomenon and therefore thousands of devotees who believe they are badly affected by Shani visit the shrine to get his blessings.
Shani, or Sani, is one among the navagrahas and is believed to create problems in the life of people, especially by those people who keep close track of their horoscope and believe in astrology.
The exact name of the Shani Temple at Thirunallar is Sri Dharbaraneswara Swamy Devasthanam and it is also referred as Saneeswara BhagavanTemple. The main temple is dedicated to Lord Shiva. But the Shani Shrine has become more popular than the main temple primarily due to belief of devotees that by praying at the shrine will make Shani happy and thereby all the miseries and hardship are removed.
Legend has it that Lord Nala mentioned in the Epics and Puranas was relieved of all sufferings after praying at this shrine.
Believed to have been built in the 7th century, the temple also has small shrines dedicated to other gods including Lord Ganesha.
Thirunallaru Shani Templeis located about 5 km west of Karaikal inPondicherry. The temple lies on the Karaikal – Mayiladuthurai and Karaikal – Kumbakonam road. There are direct buses from Chennai to Thirunallar. The easiest route is from Chennai to Thirunallar is via Tindivanam, Pondicherry, Chidambaram, Tranquebar, Karaikal.
Nearest Railway Station to Thirunallar Shani Temple is the Mayiladuthurai Railway Station.
It must be noted here that Karaikal is part of Pondicherry Union Territorybut is surrounded by Tamil Nadu on three sides and on the east by Bay of Bengal
Contact info – Phone office – 04368 236530
Fax - 04368 236504
E-mail – sds.kkl@nic.in


BOHAR Picture


திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு அமைச்சர்கள் வருகை தந்தனர்


திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்குஇந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன்,செய்தி மற்றும் சிறப்பு திட்ட அமலாக்கத்துறையின் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வருகை தந்து,கோயிலின் பல்வேறு நலத்திட்டங்களைஆய்வு செய்தனர்.பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானம்,புதியதாகக் கட்டப்பட்டு வருவதையும் ஆனந்தவிலாச மண்டபம் ஆகியவற்றைப் பார்வையிட்டனர்.
முன்னதாக கோயிலின் தக்கார் ப.தா.கோட்டை மணிகண்டன்,இணை ஆணையர் அர.சுதர்சன் ஆகியோர் வரவேற்றனர்.உதவி ஆணையர் செல்லத்துரை,அலுவலகக் கண்காணிப்பாளர் செல்வகுமாரி,கண்காணிப்பாளர்கள் ராமசாமி,வெங்கடேசன்,சுப்பையா ஆகியோர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மாசித்திருவிழா அடுத்தமாதம் 26 இல் தொடங்குகிறது


திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழாஅடுத்தமாதம்26 ஆம் தேதி தொடங்குகிறது.10 தினங்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவின் சிறப்பாக மார்ச் 3 இல் சிகப்புச்சாத்தியும்,மார்ச்4 இல் பச்சைச் சாத்தியும் மார்ச் 6 ஆம்தேதி காலை 5 மனிக்கு பெருமை வாய்ந்த தேரோடும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.இலட்சக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடும் இந்நிகழ்ச்சியைப் பார்த்தால் வினைகள் தீரும்.

சூரசம்காரக் காட்சி-கடலா கடலலையா


வள்ளி கோயிலிலுள்ள கல்வெட்டு


கல்வெட்டுகள்



இரண்டாம் வரகுணமாறனின் கல்வெட்டு -கி.பி.874





நவதிருப்பதி - நவகைலாசம்


காணவேண்டிய நவத்திருப்பதிகள்

நெல்லை - தூத்துக்குடி மாவட்டங்கள் சைவ-வைணவ கோவில்கள் நிறைந்த ஆன்மிக பூமியாகும். வைணவர்கள் புண்ணிய தலங்களாக கருதும் 108 திவ்விய தேசங்களில் தலைசிறந்து விளங்கும் நவ திருப்பதிகள் தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் இரு கரைகளிலும் அமைந்துள்ளது அவற்றை பற்றிக் காண்போம்.

ஸ்ரீவைகுண்டம் -சூரியன்
நவதிருப்பதிகளில் முதல் திருப்பதியாக விளங்குவது ஸ்ரீவைகுண்டம். இங்குள்ள மூலவர் பெருமாள் நின்ற கோலத்தில் வைகுண்ட நாதராக அருள்பாலிக்கிறார். உற்சவர்கள்ளபிரான். இந்த கோவில் நெல்லையில் இருந்து 28 கி.மீ தூரத்திலும் தூத்துக்குடியில் இருந்து 36 கி.மீ தூரத்திலும் உள்ளது.

திருவரகுணமங்கை(நத்தம்) - சந்திரன்
ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் உள்ளது திருவரகுணமங்கை என்னும் நத்தம் திருத்தலம். இங்குள்ள பெருமாள் விஜயாநன பெருமாள்.

திருப்புளியங்குடி - புதன்
நத்தத்தில் இருந்து 1/2 கி.மீ. தூரத்தில் உள்ளது திருப்புளியங்குடி. இங்குள்ள பெருமாள் காய்சினவேந்தன் என்று அழைக்கப்படுகிறார்.

பெருங்குளம் - சனி
திருப்புளியங்குடியில் இருந்து அதே சாலையில் 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது பெருங்குளம். இங்குள்ள மூலவர் வேங்கடவாணன் உற்சவர் மாயக்கூத்தர்.

தொலைவில்லிமங்கலம் (இரட்டைதிருப்பதிதெற்குகோவில்) - ராகு
பெருங்குளத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் மங்களகுறிச்சியில் இருந்து வலது புறமாக திரும்பி 2 கி.மீ மேற்கு நோக்கி வந்தால் இரட்டை திருப்பதி தலங்களை அடையலாம். இரட்டை திருப்பதியில் தெற்கு கோவிலில் மூலவர் தேவர்பிரான் உற்சவர் ஸ்ரீனிவாசன்.

வடக்குகோவில் (இரட்டைதிருப்பதி) - கேது
தெற்கு கோவிலில் இருந்து கண்ணுக்கு எட்டிய தூரத்தில் உள்ளது. வடக்கு கோவில் இங்குள்ள மூலவர் அரவிந்த லோசனர். உற்சவர் செந்தாமரைக் கண்ணன்.

தென்திருப்பேரை - சுக்கிரன்
நெல்லையில் இருந்து 38 கி.மீ. தொலைவில் நெல்லை - திருச்செந்தூர் ரோட்டில் உள்ளது. இங்குள்ள மூலவர் மகரநெடுங்குழைக்காதன் உற்சவர் நிகரில் முகில்வண்ணன்.

திருக்கோளுர் - செவ்வாய்
தென்திருப்பேரையில் இருந்து ஆழ்வார்திருநகாி செல்லும் வழியில் 3 கி.மீ. மேற்காக வந்து இடதுபுறம் செல்லும் ரோட்டில் 2 கி.மீ சென்றால் திருக்கோளுர் திருத்தலம் வரும். இங்குள்ள மூலவர் வைத்தமாநிதி பெருமாள். உற்சவர் நிச்சோபவிந்தன். இந்த தலம் மதுரகவி ஆழ்வார் அவதார தலமாகும்.
ஆழ்வார்திருநகரி (திருக்குருகூர்) - குருவியாழன்
ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் ஆழ்வார்திருநகரி அமைந்து உள்ளது. இங்குள்ள பெருமாள் ஆதிநாதன் என்று அழைக்கப்படுகிறார்.


நவகைலாயக்கோவில்கள்
நவகைலாயங்கள் எனப்படும் 9 சிவத்தலங்களும் நெல்லை-தூத்துக்குடி மாவட்டங்களில்தான் உள்ளது. அவை வருமாறு :-

பாபநாசம் - சூரியன்
நவகைலாயங்களில் முதல் கைலாயமாக திகழ்வது பாபநாசம் பாவநாசநாதர் கோவில். நெல்லையில் இருந்து சுமார் 45 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள மூலவர் ருத்திராட்சத்தினால் ஆனவர்.  அம்பாள் உலகாம்பிகை.

சேரன்மாதேவி - சந்திரன்
2வது கைலாயமாக திகழ்வது சேரன்மாதேவி அம்மநாத சுவாமி கோவில். இந்த கோவில் நெல்லையில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது. அம்பாள் ஆவுடைநாயகி.

கோடகநல்லூர் - செவ்வாய்
இந்த தலம் 3-வது கைலாயமாக விளங்குகிறது.  இங்குள்ள இறைவன் பெயர் கைலாச நாதர். இறைவி பெயர் சிவகாமி அம்பாள். இந்த கோவில் நெல்லையில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது. சேரன்மாதேவி ரோட்டில் நடுக்கல்லூர் என்ற ஊரில் இருந்து தெற்கே ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது.

குன்னத்தூர் - ராகு
நவகைலாயங்களில் 4-வது தலமாக திகழ்வது குன்னத்தூர் கோதபரமேசுவரர் கோவில் இந்த கோவில் நெல்லை பேட்டையில் இருந்து மேல திருவேங்கடநாதபுரம் செல்லும் வழியில் உள்ளது. இங்குள்ள அன்னை சிவகாமி அம்பாள் என்றழைக்கப்படுகிறாள். (இந்த 4 தலங்களும் நெல்லை மாவட்டத்தில் உள்ளது)

முறப்பநாடு - குரு (வியாழன்)
5-வது தலம் முறப்பநாடு கைலாசநாதர் கோவில். நெல்லையில் இருந்து 17 கி.மீ. தொலைவில் தூத்துக்குடி செல்லும் சாலையில் உள்ளது. நெல்லையில் இருந்து வல்லநாடு கொங்கராயகுறிச்சி கலியாவூர் உழக்குடி பூவாணி ஆழ்வார் கற்குளம் செல்லும் டவுன் பஸ்கள் இங்கு செல்லும். இது தவிர பாளை புதிய பஸ் நிலையத்தில் இருந்து தூத்துக்குடி செல்லும் பஸ்கள் முறப்பநாட்டில் நின்று செல்லும்.

ஸ்ரீவைகுண்டம் - சனி
நவகைலாயங்களில் 6-வது தலம் ஸ்ரீவைகுண்டம் கைலாயநாதர் கோவில். இது பூலோக கைலாயம் என்று அழைக்கப்படுகிறது. நெல்லையில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்குள்ள அம்பாள் சிவகாமி அம்மை. இது குமர குருபர சுவாமிகள் அவதரித்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்திருப்பேரை - புதன்
இந்த தலங்களில் 7-வதாக இடம் பெறுவது தென்திருப்பேரை கைலாயநாதர் கோவில். இங்கு சுவாமி சிவகாமி அம்பாளுடன் அருள்பாலிக்கிறார். அம்பாளுக்கு அழகிய பொன்னம்மாள் என்ற திருப்பெயரும் உண்டு. இக்கோவில் நெல்லையில் இருந்து 38 கி.மீ. தொலைவில் உள்ளது.

ராஜபதி - கேது
நவகைலாயங்களில் 8-வது கைலாயமாக திகழ்வது ராஜபதி தலம் ஆகும். இக்கோவில் இயற்கை சீற்றத்தால் அழிந்துவிட்டது. முன்பு கோவில் இருந்த இடத்தில் அடையாளமாக ஒரு கல் மட்டுமே உள்ளது. அதையே தற்போது பக்தர்கள் வணங்குகிறார்கள் தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரையை அடுத்த மணத்தி கிராமத்தில் இருந்து ஒரு கி.மீ தொலைவில் வடக்கே அமைந்து உள்ளது. இக்கோவிலில் இருந்ததாக கூறப்படும் நந்தி தற்போது ஓட்டப்பிடாரம் உலகம்மன் கோவிலில் உள்ளது.

சேர்ந்தபூமங்கலம் - சுக்கிரன்
இந்த திருத்தலங்களில் 9-வது கைலாயமாக திகழ்வது சேர்ந்தபூமங்கலம் கைலாயநாதர் கோவில். இங்குள்ள அம்பாள் சிவகாமி அம்மை. இந்த தலத்தின்தான் தாமிரபரணி ஆறு கடலில் சங்கமிக்கிறது. நெல்லையில் இருந்து புன்னக்காயல் செல்லும் வழியில் இவ்வூர் உள்ளது. இந்த நவ தலங்களில் வழிபட்டால் நவக்கிரக தோஷம் நீங்கி அவைகளின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

கோவில்  திறப்பு நேரம் காலை மாலை
பாபநாசம்        6.30 மணி முதல் 12 மணி வரை 5 மணி முதல் இரவு 7 மணி வரை
சேரன்மாதேவி 9 மணி முதல் 10 மணி வரை 4 மணி முதல் மாலை 5 மணி வரை
கோடகநல்லூர் 9 மணி முதல் 10 மணி வரை 5 மணி முதல் இரவு 7 மணி வரை
குன்னத்தூர் 7 மணி முதல் 8 மணி வரை 5 மணி முதல் மாலை 6 மணி வரை
முறப்பநாடு 7 மணி முதல் 9 மணி வரை 5 மணி முதல் இரவு 7 மணி வரை
ஸ்ரீவைகுண்டம் 6 மணி முதல் 10 மணி வரை 4 மணி முதல் இரவு 8 மணி வரை
தென்திருப்பேரை 7 மணி முதல் 9 மணி வரை 5 மணி முதல் மாலை 6 மணி வரை
சேர்ந்தபூமங்கலம் 7மணிமுதல்9 மணி வரை 5 மணி முதல் மாலை 6.30 மணி வரை


உவரிசுயம்புலிங்க சுவாமி


நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே வங்கக்கடல் ஓரம் இயற்கை எழில் சூழ அமைந்ததுதான் உரி கிராமம். இங்குள்ள கடற்கரையில் கடம்ப கொடிகளுக்கு இடையே சுயம்புவாய் தோன்றி இப்பூவுலக மக்களின் பிணி போக்கி அருள் செய்து கொண்டு இருக்கிறார் சுயம்புலிங்க சுவாமி.
இயற்கையில் எழில் வாய்ந்த உவரி கிராமம் முன்பு கீழுர் மேலூர் என்று இரு பகுதிகளாக இருந்தது. இவ்விரு பகுதிகளையும் ஒற்றையடி பாதையே இருந்தது. இதன் வழியாகதான் யாதவர் குல பெண்கள் பால் தயிர் கொண்டு செல்வார்கள். அவ்வாறு அவர்கள் செல்லும்போது அவ்வழியில் கிடந்த கடம்பக்கொடிகளில் ஒருவரது கால் தினமும் இடறி பால் தயிர் ஆகியவை பானையோடு தரையில் விழுந்து கொட்டிக் கொண்டே இருந்தது. தினமும் அந்த குறிப்பிட்ட இடத்திலேயே பானைகள் விழுந்து பால் கொட்டும் சம்பவம் வாடிக்கையாக இருந்து வந்தது. தினமும் இவ்வாறு நடந்ததால் வருமன அந்த பெண்ணுக்கு வருமானம் குறைந்தது. இதனால் அவளது கணவன் ஆத்திரமடைந்து நடந்ததை கேட்டான். அந்த பெண்ணும் உள்ளதை உள்ளபடியே கணவனிடம் கூறினாள். இதைக்கேட்ட இவளது கணவன் குறிப்பிட்ட அந்த இடத்துக்கு சென்று அங்கிருந்த கடம்பப்கொடியை கோடாரியால் வேரோடு வெட்டினான். அப்போது அந்த கடம்பக்கொடியின் அடிப்பகுதியில் அடிப்பகுதியில் இருந்து ரத்தம் பீறிட்டு வந்தது.இதனால் அதிர்ச்சி அடைந்த அவன் செய்வதறியாது திகைத்து நின்றான். இதற்கிடையே இந்த சம்பவம் காட்டு தீ போல் ஊருக்குள் பரவியதால் ஊர் பெரியவர்களும் அங்கு வந்தனர். அப்போது அங்கிருந்த ஒரு பெரியவருக்கு சுவாமியின் இருள் கிடைத்து அவர் மூலமாக இங்கு சிவபெருமாள் சுயம்புவாக தோன்றி இருப்பதும் ரத்தம் வடியும் இடத்தில் சந்தனத்தை பூசினால் ரத்தம் வழிவது நின்றுவிடும் என்ற அருள்வாக்கு கிடைத்தது.
அடி முடி அறியா ஓங்கி உயர்ந்த சிவபெருமான் நம் ஊரில் தாமாகவே தோன்றியுள்ளான் என்ற விபரம் அறிந்த ஊர் மக்கள் ஆனந்த வெள்ளத்தில் பக்தி பரவசமடைந்தனர். இதையடுத்து வெட்டுண்ட இடதத்தில் சந்தனத்தை தடவ என்ன ஆச்சரியம் ரத்தம் வழிவது உடனடியாக நின்று விட்டது. அன்று முதல் இன்றுவரை சுவாமிக்கு தினமும் சந்தன காப்பு இடப்படுபிறது. மறுநாள் அபிஷேகத்துக்கு முன்பு அந்த சந்தன காப்பு பிரிக்கப்பட்டும் அந்த சந்தணமே அருமருந்தாக பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது பல்வேறு மருத்தவ குணங்கள் நிறைந்தது என்று கூறப்படுகிறது.இங்குள்ள சுவாமியை இதய சுத்தியுடன் நம்பிக்கையுடன் வழிபட்டால் கேட்வருக்கு கேட்ட வரமும் தீரா பிணி கொண்டவருக்கு பிணி தீர்த்தும் அருள் பாலித்து வருகிறார் சுயம்பு லிங்கசாமி. இந்த கலியுகத்தில் இப்படியும் நடக்குமா? என்று எண்ணத் தோன்றுகிறதா? ஆம் இன்றும் உவரி கோவிலில் நோய் முற்றியவர்கள் 41 நாட்கள் தங்கியிருந்து நலம்பெற்று திரும்புவதை காணலாம். இக்கோவிலின் சிறப்புகளை அறிந்து நெல்லை தூத்துக்குடி குமரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் தினந்தோறும் வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாக திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இங்கு வரும் பக்தர்கள் கடல் மண்ணை கடல் நீர் சொட்ட சொட்ட சுமந்து வந்து கடற்கரையில் குவித்து வைக்கும் நேர்ச்சைகளைச் செய்வது வேறு எங்கும் காண முடியாது. மார்கழி மாதம் 30 நாட்களும் சூரிய ஒளி சுவாமி மீது தினமும் படும் சிறப்பும் இக்கோவிலுக்கு உண்டு.இந்த கோவிலில் உயர்ந்த வாயிலைக் கொண்ட கல் மண்டப சுற்றுபிரகாரத்துடன் கூடியது. கோவிலின் உள்ளே சென்றதும் ஓங்கி உயர்ந்து இருக்கும் கொடிமரத்தை தரிசிக்கலாம். அதையடுத்து பலி பீடம் தொடர்ந்து மூலவர்க்கு முன் நந்தியும் உள்ளது.
உள்ளே சுயம்புவாக எழுந்தருளியுள்ள சுவாமி சுயம்புவாக எழுந்தருளியுள்ள சுவாமி ஐந்துதலை நாகம் குடைப்பிடிக்க அதன் கீழ் சிறிய லிங்கமாக இருக்கிறார். மூர்த்தி சிறிது என்றாலும் கீர்த்தி பெரிது என்பதை உணர்த்தும் விதமாக இறைவன் இங்கு காட்சி அளிக்கிறார்.
பிரம்மசக்திஅம்மன்
தந்தையுடன் தாயும் இருப்பதுதான் சிறந்தது. அதுபோல் இங்கு தாயாக இருந்து பக்தர்களை காப்பவள் பிரம்மசக்தி அம்மன். இந்த அம்மனுக்கு தனி கோவில் உள்ளது. மேலும் சுயம்புலிங்க சுவாமி கோவில்  வளாகத்தில் வினாயகர் மற்றும் பிற பரிவார தேவதைகளும் உள்ளனர். கோவிலின் உற்சவ மூர்த்தி சுப்பிமணியர் இக்கோவிலின் தல விருட்சம் கடம்பக்கொடி.

முன்னோருக்குத் திதி


வாழ்ந்து மறந்த முன்னோரின் ஆத்மா சாந்தி அடைய,அவர்களுக்குத் திதி கொடுப்பது அவசியமாகும்.அலையாடும் திருச்செந்தூரின் கடற்கரையில் தை அமாவாசை,ஆடி அமாவாசை மற்றும் அமாவாசைக் காலங்களில் மறையோதும் அந்தணர்களைக் கொண்டு திதி கொடுத்தால் முன்னோர் ஆத்மா சாந்தியடையும். காசி, ராமேஸ்வரம் போன்ற இடங்களில் திதி கொடுப்பதைக் காட்டிலும் பலமடங்கு மேலாகும்.

கிரிவலம் [KIRIVALAM]


திருச்செந்தூரில் பெளர்ணமி கிரிவலம்
கிரி என்றால் மலை.வலம் என்பது வலதுபுறமாக [பிரதட்சணம்]சுற்றுவது. கிரிவலம் என்றால் மலையைச் சுற்றுவது என்று பொருள்படும்.கிரிவலம் என்றவுடன் நமக்கு திருவண்ணாமலை நினைவுக்கு வரும்.அங்கு மலையாகவே சிவபெருமான் உள்ளார்.
கண்டம் தான் கறுத்தான் காலன் ஆருயிர் 
பண்டுகால் கொடு பாய்ந்த பரமனார்
அண்டத்து ஓங்கும் அண்ணாமலை கைதொழ
விண்டுபோகும் நம் மேலை வினைகளே’
 என்று அண்ணாமலையாரை திருநாவுக்கரசர் பாடிப் பரவசமெய்தினார்.
அண்ணாமலையாரின் சுடரில் உதித்த,செந்தீயான செந்தில் கந்தமாதன பர்வதம் [செந்தின்மாமலை]குடைவரையில் கோடிச் சூரியனாகச் சுடர் விட்டுக் கொண்டிருக்கிறார்.முருகப்பெருமானின் அவதாரம் சூரபத்மனை வதம் செய்வதற்காகஆகும்.இவ்வவதாரத்தின் நோக்கம் நிறைவேறிய இடம் திருச்செந்தூராகும்.குன்றிருக்கும் இடமெல்லாம் கோயில் கொண்ட சுப்பனும் [சுப்பிரமணியனும்],அப்பனும் [சிவனும்]ஓன்று என்பதாக தற்போது திருச்செந்தூரில் கிரிவலம் வரும் நேர்த்திக்கடனை பக்தர்கள் செய்து வருகின்றனர்.
பெளர்ணமி நாளில் திருச்செந்தூர் தூண்டிகை விநாயகர் கோயிலை மூன்று தரம் சுற்றி வந்து பின்பு வெளிப்பிரகாரத்தை மூன்று முறைச் சுற்றி வழிபடுகின்றனர்.எவ்வித இடர்பாடுமின்றி இரவுபகல் எந்நேரமும் சுற்றி
வருவதற்கு வசதியாக உள்ளது.இரத்த அழுத்தம்,இதயநோய்,சர்க்கரை வியாதி குணமாகும் அனைத்திற்கும் மேலாக முருகனருள் கிட்டும். திருவண்ணாமலைக்கும் திருச்செந்தூர் சந்தனாமலைக்கும் பல்வேறு ஒற்றுமைகள் உள்ளன.திருவண்ணாமலையில் அஷ்டலிங்கங்கள் உள்ளன. அதுபோல் திருச்செந்தூரிலும் அஷ்டலிங்கங்கள் உள்ளன.மூலவரான பாலசுப்பிரமணியர் வழிபடும் 1.பிருத்வி லிங்கம் 2.அப்புலிங்கம் 3.தேயுலிங்கம் 4.வாயுலிங்கம் 5.ஆகாயலிங்கம் மற்றும் மூலவருக்குப் பின்னால், 6.சூரியலிங்கம் மூலவருக்கு வலப்புறம் 7.சந்திரலிங்கம் உற்சவமூர்த்தியான ஆறுமுகப்பெருமானுக்கு வலப்புறம் 8.ஆன்மலிங்கம் ஆகியன உள்ளன. தீர்தங்களைப் பொறுத்த அளவில் திருவண்ணாமலையில் ஏராளமான தீர்த்தங்கள் உள்ளன.திருச்செந்தூரில் 24 காயத்திரி மந்திரங்களும் 24 தீர்த்தங்களாக உள்ளன.முற்காலத்தில் தீர்த்தங்கள் தனித்தனியே இருந்தன. தற்போது 23 தீர்த்தங்கள் கடலினுள்ளே உள்ளன.உற்சவ மூர்த்திக்கு நேராக கடற்கரையில் கந்தபுஷ்கரணி எனப்பெறும் நாழிக்கிணறு 24 வது தீர்த்தமாக உள்ளது.கடலில் ஒருமுறை நீராடினால் 23 தீர்த்தங்களில் நீராடிய பயன் கிடைக்கும்.ஆதிசங்கரர்,வஷிஷ்டர்,வாம தேவர்,சாபாலி,காவிபர், மார்க்கண்டேயர், கொளதமமுனிவர்,முற்கலமுனிவர்,தேசிகர், அகத்தியர், அருணகிரியார்,குமரகுருபரர்,போகர் உள்ளிட்ட ஏராளமான சித்தர்கள் முருகனைப் போற்றி அருள்பெற்றத் தலமாகும்.அகிலபாரத முருகபக்தப் பேரவையினர் ஒவ்வொருமாதமும் கிரிவலம் செய்து வருகின்றனர்.கிரிவலம் முடிந்ததும் பிரசாதம் வழங்கப்படுகிறது.இதற்கான ஏற்பாடுகளை பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.ஆதித்தன் செய்து வருகிறார்.


குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில்

குலசேகரன்பட்டினம்முத்தாரம்மன்கோவில்
1
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை அடுத்துள்ள குலசேகரன்பட்டினத்தில் அமைந்து உள்ள முத்தாரம்மன் கோவில் தமிழகத்தில் உள்ள புகழ் பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இங்கு நடக்கும் தசரா திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் தசரா திருவிழா சிறப்பாக நடக்கின்றது. இவ்விழாவின் போது லட்சக்கணக்கான பக்தா்கள் திரளுவார்கள். தொடர்புக்கு 04639-250355.

நவ கைலாசங்கள்-ஆன்மீகச் சுற்றுலா


நவகைலாயகோவில்கள்
நவகைலாயங்கள் எனப்படும் 9 சிவத்தலங்களும் நெல்லை-தூத்துக்குடி மாவட்டங்களில்தான் உள்ளது. அவை வருமாறு :-

பாபநாசம் - சூரியன்
10
நவகைலாயங்களில் முதல் கைலாயமாக திகழ்வது பாபநாசம் பாவநாசநாதர் கோவில். நெல்லையில் இருந்து சுமார் 45 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள மூலவர் ருத்திராட்சத்தினால் ஆனவர்.  அம்பாள் உலகாம்பிகை.

சேரன்மாதேவி - சந்திரன்
2வது கைலாயமாக திகழ்வது சேரன்மாதேவி அம்மநாத சுவாமி கோவில். இந்த கோவில் நெல்லையில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது. அம்பாள் ஆவுடைநாயகி.

கோடகநல்லூர் - செவ்வாய்
இந்த தலம் 3-வது கைலாயமாக விளங்குகிறது.  இங்குள்ள இறைவன் பெயர் கைலாச நாதர். இறைவி பெயர் சிவகாமி அம்பாள். இந்த கோவில் நெல்லையில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது. சேரன்மாதேவி ரோட்டில் நடுக்கல்லூர் என்ற ஊாில் இருந்து தெற்கே ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது.

குன்னத்தூர் - ராகு
நவகைலாயங்களில் 4-வது தலமாக திகழ்வது குன்னத்தூர் கோதபரமேசுவரர் கோவில் இந்த கோவில் நெல்லை பேட்டையில் இருந்து மேல திருவேங்கடநாதபுரம் செல்லும் வழியில் உள்ளது. இங்குள்ள அன்னை சிவகாமி அம்பாள் என்றழைக்கப்படுகிறாள். (இந்த 4 தலங்களும் நெல்லை மாவட்டத்தில் உள்ளது)

முறப்பநாடு - குரு (வியாழன்)
5-வது தலம் முறப்பநாடு கைலாசநாதர் கோவில். நெல்லையில் இருந்து 17 கி.மீ. தொலைவில் தூத்துக்குடி செல்லும் சாலையில் உள்ளது. நெல்லையில் இருந்து வல்லநாடு கொங்கராயகுறிச்சி கலியாவூர் உழக்குடி பூவாணி ஆழ்வார் கற்குளம் செல்லும் டவுன் பஸ்கள் இங்கு செல்லும். இது தவிர பாளை புதிய பஸ் நிலையத்தில் இருந்து தூத்துக்குடி செல்லும் பஸ்கள் முறப்பநாட்டில் நின்று செல்லும்.

ஸ்ரீவைகுண்டம் - சனி
நவகைலாயங்களில் 6-வது தலம் ஸ்ரீவைகுண்டம் கைலாயநாதர் கோவில். இது பூலோக கைலாயம் என்று அழைக்கப்படுகிறது. நெல்லையில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்குள்ள அம்பாள் சிவகாமி அம்மை. இது குமர குருபர சுவாமிகள் அவதரித்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்திருப்பேரை - புதன்
இந்த தலங்களில் 7-வதாக இடம் பெறுவது தென்திருப்பேரை கைலாயநாதர் கோவில். இங்கு சுவாமி சிவகாமி அம்பாளுடன் அருள்பாலிக்கிறார். அம்பாளுக்கு அழகிய பொன்னம்மாள் என்ற திருப்பெயரும் உண்டு. இக்கோவில் நெல்லையில் இருந்து 38 கி.மீ. தொலைவில் உள்ளது.

ராஜபதி - கேது
நவகைலாயங்களில் 8-வது கைலாயமாக திகழ்வது ராஜபதி தலம் ஆகும். இக்கோவில் இயற்கை சீற்றத்தால் அழிந்துவிட்டது. முன்பு கோவில் இருந்த இடத்தில் அடையாளமாக ஒரு கல் மட்டுமே உள்ளது. அதையே தற்போது பக்தர்கள் வணங்குகிறார்கள் தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரையை அடுத்த மணத்தி கிராமத்தில் இருந்து ஒரு கி.மீ தொலைவில் வடக்கே அமைந்து உள்ளது. இக்கோவிலில் இருந்ததாக கூறப்படும் நந்தி தற்போது ஓட்டப்பிடாரம் உலகம்மன் கோவிலில் உள்ளது.

சேர்ந்தபூமங்கலம் - சுக்கிரன்
இந்த திருத்தலங்களில் 9-வது கைலாயமாக திகழ்வது சேர்ந்தபூமங்கலம் கைலாயநாதர் கோவில். இங்குள்ள அம்பாள் சிவகாமி அம்மை. இந்த தலத்தின்தான் தாமிரபரணி ஆறு கடலில் சங்கமிக்கிறது. நெல்லையில் இருந்து புன்னக்காயல் செல்லும் வழியில் இவ்வூர் உள்ளது. இந்த நவ தலங்களில் வழிபட்டால் நவக்கிரக தோஷம் நீங்கி அவைகளின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.


கோவில்
திறப்பு நேரம்
காலை
மாலை
பாபநாசம்6.30 மணி முதல் 12 மணி வரை5 மணி முதல் இரவு 7 மணி வரை
சேரன்மாதேவி9 மணி முதல் 10 மணி வரை4 மணி முதல் மாலை 5 மணி வரை
கோடகநல்லூர்9 மணி முதல் 10 மணி வரை5 மணி முதல் இரவு 7 மணி வரை
குன்னத்தூர்7 மணி முதல்   8 மணி வரை5 மணி முதல் மாலை 6 மணி வரை
முறப்பநாடு7 மணி முதல்   9 மணி வரை5 மணி முதல் இரவு 7 மணி வரை
ஸ்ரீவைகுண்டம்6 மணி முதல் 10 மணி வரை4 மணி முதல் இரவு 8 மணி வரை
தென்திருப்பேரை7 மணி முதல்   9 மணி வரை5 மணி முதல் மாலை 6 மணி வரை
சேர்ந்தபூமங்கலம்7மணிமுதல்  9 மணி வரை5 மணி முதல் மாலை 6.30 மணி வரை
 

திருச்செந்தூர் கோயில் அன்பு இல்லத்திற்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்கப்பட்டது

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் நிர்வாகத்திலுள்ள அன்பு இல்லத்தில் ஆதரவற்ற ஏராளமான குழந்தைகள் தங்கி 3 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து வருகின்றனர்.இவர்களுக்கான உணவு,உடைகள்,கல்விக்கான அனைத்துச் செலவினங்களையும் கோயில் நிர்வாகமே செய்துவருகிறது.இந்நிலையில் இம்மாணவர்களுக்குச் சுத்தமான குடிநீர் வழங்கும் இயந்திரத்தை ராஜபாளையம் சத்திரப்பட்டியைச் சேர்ந்த ராமசாமி பண்ணையார் 2.20 லட்சம் மதிப்பிலானதை வழங்கியுள்ளார்.இதனை கோயில் இணை ஆணையர் அர.சுதர்சன் தலைமையில் தக்கார் கோட்டை மணிகண்டன் இயக்கி வைத்தார். 

திருச்செந்தூர் தலபுராணம் -பாடலும் பொருளும்

சிந்து நன்னக ரத்திலே பிறக்கினுஞ் சிறந்த
சிந்து நன்னக ரத்தையே தெரிசனஞ் செயினும்
சிந்து நன்னக ரத்திலே யிறக்கினுந் தெய்வச்
சிந்து நன்னக ரெண்ணினு முத்திசேர்ந் திருப்பார்.
திருச்செந்தூர் தல புராணம்-பாடல் 93

பொருள்-திருச்செந்தூரில் பிறந்தாலும்,மேன்மைமிக்க செந்தில் பதியை வழிபட்டாலும்,நலமிக்ககடற்கரை ஓரத்தலமான இனிய அத்தலத்தில் இறந்தாலும்,தெய்வீகமான செயந்திமாநகரைத் தியானித்தாலும்,வழிபடுவோர் இனிய முருகனின் பாதத்தை அடைந்து இருப்பர்.

BOGAR


Siddhar Bogar , Palani Murugan Temple
The definition of enlightenment has many expressions; the value of perfection can turn the unreal into a spectacular world of intrigue of what is possible in this world that we live in. In the era 3000 B.C. that we so misjudged as belonging to the primitive period has recorded the life of at least one person who surpassed most human beings in the quest for knowledge and the power of wisdom.
3000 B.C. a world that was still waking up to evolution witnessed the presence of Siddhar Bogar, a powerful astrologer, and a yogi who had mastered the science of medicine perfectly. The highlights of his life maybe plenty but those that would intrigue us today are recorded in the Saptakanda, a work that describes in detail the presence of an aircraft that took him all the way to China where he imparted his knowledge. Another intriguing fact is that he used 9 poisons or the Nava Bhashanam to make a statue of Lord Muruga (Dandapani vigraha) which has since been installed in the Murugan temple at Palani near Madhurai and is still worshipped. The interesting aspect of this idol is that its composition of 9 poisons (made out of 4000 rare herbs), elicits life giving essence into the fluids of libation as the abhishekam progresses which cures all human diseases when consumed.
Siddhar Bogar’s shrine, his Samadhi is what remains today as a powerful example of the difference in lifestyle, the deep rooted principles and values that once governed the people of this soil. We all live in the same world, making use of probably the same things to evolve, yet the intensity of worship and the much needed awareness to realize these methods of living are not half as strong now.

திருச்செந்தூர் கோயிலில் சென்னை பக்தசபை தொடர் அன்னதானம்



திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலில் சென்னை கோடம்பாக்கம் சூளைமேடு பார்வதி சமேதஸ்ரீகண்டேசுவரர் சன்னிதானம்,தர்ம சாஸ்தா மண்டலி,வேத சம்ரட்சண வித்தியாலயா,ராமநாம பக்தசபை ஆகியன இணைந்து வரும் 12 ஆம் தேதுஇ வரைகாலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை தொடர் அன்னதானத்தை நடத்துகின்றனர்.கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன் அன்னதானத்தைத் தொடங்கி வைத்தார்.

திருச்செந்தூர் சுப்பிரமணீயசுவாமி கோயிலில் புதியதாக எழிலுடன் ஆனந்த விலாச மண்டபம்

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் வடபுறம் இருந்த ஆனந்த விலாச மண்டபம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இடிந்து போனது. இம் மண்டபத்தில் ஆவணி மற்றும் மாசித் திருவிழாக்களிலும்,7ஆம்,8ஆம் திருவிழாக் காலங்களில் சுவாமி சண்முகர் இந்த மண்டபத்திற்கு மகிழ்வுடன் எழுந்தருள்வார்.தற்போது இம்மண்டபத்தை சுமார் 30 லட்சம் மதிப்பீட்டில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது .இணை ஆணையர் அர.சுதர்சன் தலைமை தாங்கினார்.தக்கார் கோட்டை மணிகண்ட்டன் அடிக்கல் நாட்டினார்.கணபதி பூஜை,லட்சுமி பூஜை,வாஸ்து பிரம்மா பூஜை ஆகியவற்றுடன் கோயில் விதாயகர்த்தா சிவசுவாமி தீட்சிதர் ,சிருங்கேரிமடம் திருச்செந்தூர் கிளை நிர்வாகி காசிவிசுவநாதன்,கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடத்தி வைத்தனர்.விழாவில் யூனியன் தலைவர் ஹேமலதா லிங்ககுமார், பஞ்சாயத்து தலைவர் மு.சுரேஷ் பாபு,கோயில் அலுவலக கண்காணிப்பாளர் செல்வகுமாரி,ஸ்தலத்தார்கள் சபை தலைவர் குமார்,சோன கிருஷ்ணமூர்த்தி, திருக்கோயில் பணியாள்ர்கள் சங்கத் தலைவர் தோப்பூர் சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

18 siddhars in the Tamil siddha tradition


There are 18 siddhars in the Tamil siddha tradition. They are,
  1. Sri Patanjali Siddhar
  2. Sri Agastya Siddhar
  3. Sri Kamalamuni Siddhar
  4. Sri Thirumoolar Siddhar
  5. Sri Kuthambai Siddhar
  6. Sri Korakkar Siddhar
  7. Sri Thanvandri Siddhar
  8. Sri Konganar Siddhar
  9. Sri Sattamuni Siddhar
  10. Sri Vanmeegar Siddhar
  11. Sri Ramadevar Siddhar
  12. Sri Nandeeswarar (Nandidevar) Siddhar
  13. Sri Edaikkadar Siddhar
  14. Sri Machamuni Siddhar
  15. Sri Karuvoorar Siddhar
  16. Sri Bogar Siddhar
  17. Pambatti Siddhar
  18. Sundarandandar

கசவனம்பட்டி சித்தர் சாமி


பாம்பன் சாமிகள் இயற்றிய மயூரபந்தம்


பாறைப்பட்டி மெளனகுருசாமி சித்தர்


பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சாமி


வல்லநாடு சித்தர் சாது சிதம்பர சாமி


வள்ளி அம்மன் குகை நுழைவு வாயில்


 
வாரந்தோறும் கூட்டுப்பிராத்தனை!!
நமது இனையதளத்தில்!!
Click here...