<bgsound loop='infinite' src='http://db.oruwebsite.com/Tamil/Songs/10%20-%20Devotional%20Songs/01%20Hindu%20Songs/29%20Kantha%20Guru%20Kavasam/Kantha%20Guru%20Kavasam.mp3'></bgsound> May 2012 | Tiruchendhur | திருச்செந்தூர்

முருகா சரணம்

வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட தீரவேல் செவ்வேள் திருக்கைவேல்-வாரி குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும் துளைத்தவேல் உண்டே துணை.

சண்முகா சரணம்

உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன் பின்னை ஒருவரையான் பின்செல்லேன்- பன்னிருகை கோலப்பா வானோர் கொடியவினை தீர்த்தருளும் வேலப்பா செந்திவாழ் வே

சரவணபவா சரணம்

அஞ்சு முகந்தோன்றின் ஆறு முகந்தோன்றும் வெஞ்சமரில் அஞ்சலென வேல்தோன்றும்-நெஞ்சில் ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும் முருகாவென்று ஓதுவார் முன்.

ஆறுபடைவேலா சரணம்

குன்றம் எறிந்ததுவும் குன்றப்போர் செய்ததுவும் அன்றங் கமரரிடர் தீர்த்ததுவும்-இன்றென்னைக் கைவிடா நின்றதுவும் கற்பொதும்பிற் காத்ததுவும் மெய்விடா வீரன்கை வேல்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் 3ம் தேதி வைகாசி திருவிழா


திருச்செந்தூர் :திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு பூஜை நேரங்கள் மாற்றப்பட்டுள்ளதாக கோயில் இணை ஆணையர் தெரிவித்தார்.
ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும், குரு பரிகார ஸ்தலமுமான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டு தோறும் பல திருவிழாக்கள் நடந்து வருகிறது. இதில் வைகாசி விசாக திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். விசாக நட்சத்திம் அன்று முருகன் பிறந்ததால் விசாக திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. விசாக திருவிழா அன்று முருகப்பெருமானை தரிசித்தால் ஆண்டு முழுவதும் முருகனை தரிசனம் செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். அதனால் விசாக திருவிழாவிற்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் முருகனை தரிசிக்க திருச்செந்தூருக்கு வருகை தருவார்கள். இந்நிலையில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு கோயில் நடைதிறப்பு மற்றும் பூஜை நேரங்கள் மாற்றப்பட்டுள்ளதாக கோயில் இணை ஆணையர் தெரிவித்தார். 
இதுகுறித்து அவர் கூறியதாவது; வைகாசி திருவிழாவை முன்னிட்டு வரும் 2ம் தேதி அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது. 4.30 மணிக்கு விஸ்பரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், காலை 10.30 மணிக்கு உச்சிக்காலை அபிஷேகமும், தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடக்கிறது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. வரும் 3ம் தேதி விசாக திருநாள் அன்று அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்பரூப தீபாராதனையும், அதிகாலை 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், தொடர்ந்து மற்ற கால பூஜைகளும், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடக்கிறது. 
வரும் 4ம் தேதி அதிகாலை 4 மணிக்கு நடைதிறப்பும், 4.30 மணிக்கு விஸ்பரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடக்கிறது. இவ்வாறு கோயில் இணை ஆணையர் தெரிவித்தார். விசாக திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் சுதர்சன், துணை ஆணையர் செல்லத்துரை மற்றும் அதிகாரிகள் செய்துவருகின்றனர்.

திருச்செந்தூர் கோவிலுக்கு ரூ.70 லட்சம் மதிப்பில் தங்கக் கதவு: சிருங்கேரி மடம் சார்பில் வழங்கப்பட்டது


சிருங்கேரி 36-வது பீடாதிபதி பாரதி தீர்த்த சுவாமிகள் நேற்று முன்தினம் திருச்செந்தூருக்கு வந்தார். அவர் தெற்கு ரதவீதியில் உள்ள கட்டியம் அய்யப்பர் அய்யர் மகாலில் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
நேற்று அதிகாலை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்தார். அவருக்கு தங்க குடத்தில் கோவில் சார்பில் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
கோவிலில் மூலவருக்கு சிருங்கேரி பாரதி தீர்த்த சுவாமிகள் உதய மார்த்தாண்ட அபிஷேகம் செய்தார். பிறகு சுவாமிக்கு அலங்காரம் நடைபெற்றது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சிருங்கேரி மடம் சார்பில் ரூ.70 லட்சம் மதிப்பில் தங்க முலாம் பூசப்பட்ட கதவு வழங்கப்பட்டது.
இந்த தங்க கதவு மூலவர் சன்னதியில் பொருத்தப்பட்டு இருக்கிறது. கதவுக்கான தங்க சாவிகளை கோவில் தக்கார் ப.தா.கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் அர.சுதர்சன் ஆகியோரிடம் சிருங்கேரி பாரதி தீர்த்த சுவாமிகள் வழங்கினார்.
பின்னர் அவர் தங்க கதவை திறந்து வைத்து, மூலவருக்கு உதய மார்த்தாண்ட தீபாராதனை செய்து, 108 தங்க மலர்களால் அர்ச்சனை செய்தார். கோவிலில் பொருத்தப்பட்டு உள்ள தங்க கதவில் அறுபடை வீடுகளில் உள்ள முருகப் பெருமானின் உருவங்கள் பொறிக்கப்பட்டு உள்ளன.
-நன்றி மாலை மலர்

 
வாரந்தோறும் கூட்டுப்பிராத்தனை!!
நமது இனையதளத்தில்!!
Click here...