<bgsound loop='infinite' src='http://db.oruwebsite.com/Tamil/Songs/10%20-%20Devotional%20Songs/01%20Hindu%20Songs/29%20Kantha%20Guru%20Kavasam/Kantha%20Guru%20Kavasam.mp3'></bgsound> பாட்டி வைத்தியம் | Tiruchendhur | திருச்செந்தூர்

பாட்டி வைத்தியம்



பாட்டி வைத்தியம்

கண்ணாடி போடாமல் வாழலாம்-
கடைசிவரை க்ண்ணாடி போடாமல் இருக்கவிரும்புகிறீர்களா அப்படியானால் தவறாமல் தினம் கேரட் கிழங்கைப்பச்சையாக உண்ணுங்கள்.பால் வெண்ணை சாப்பிட்டால் நிறைய விட்டமின் ' ஏ 'கிடைக்கும். அதற்கு வசதி இல்லாதவர்களுக்கு கிடைத்தவரப்பிரதாசம் கரட் கிழங்கு.நிரையக் கேரட் சேர்த்துக்கொண்டால் அதே அளவு விட்டமின் ' ஏ ' பெறமுடியும்.கேரட்டில் "காரடீன்" என்கின்றசிறப்புப்பொருள் இருக்கிறதுஇதுவே விட்டமின் உண்டாவதற்குக்காரணமாக இருக்கிறது அதனால் தொற்று நோய் வராமல் விரட்டுவது.வயிற்றில் அமிலம் காரணமாகப் புளியேப்பம், பசி மந்தம் ஏற்படுகிறதா அப்படியானால் கேரட்டைத்துருவிப் பச்சடி போட்டுச் சாப்பிடுங்கள் அது நிவாரணமாகும்.கொளுப்பு காரணமாக உடல் பருமனைக் குறைக்க பட்டினி இருந்தேன் அப்பிடியும் பலன் கிடைக்கவில்லையே என்ற கவலையா, கவலையை விடுங்கள் கேரட்பச்சடி அடிக்கடி சாப்பிட்டுவாருங்கள் நீங்கள் அதிசயப்படும் விதம் இளைப்பீர்கள். கொளுப்பைக்குறைக்கும் சக்தி கேரட்டின் தனித்தன்மை.கிருமிகளை நாசம் செய்யும் சக்தி கேரட்டுக்கு உண்டு.  இரத்தக்குறைவு காரணமாக சோகை ஏற்பட்டால்தொடர்ந்து தினம் கேரட் சாப்பிட்டு வந்தால் புதியஇரத்தம் ஊறி சோகை நோய் நீங்கும். புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும் சக்தி கேரட்டுக்கு உண்டு.சிறுநீர் சம்பந்தமான கோளாறுகளை நிவர்த்தி செய்யும் ஆற்றல் கேரட்டுக்கு இருக்கிறது.சர்க்கரை நோய் உள்ளவர்கள் கேரட் சாப்பிட்டால் நோய் கொஞ்சம் கட்டுப்படும்தோலின் மென்மைக்கும், பாதுகாப்புக்கும் விளம்பரப்படுத்தும் சோப்புகளை விட நீங்கள் கேரட்டை நம்பலாம். கேரட் சருமத்தைப்பாதுகாத்து மென்மையாக வைத்திருக்கிறது.கேரட்டை பச்சை உணவாக உண்பதே சிறந்த பலனைக் கொடுக்கும். நம் நாட்டுக்காய் கறிகளை விட விலைமலிவாக கேரட் நம் நாட்டில் கிடைப்பதால் அதை வாங்கி உண்டு பயன்பெறுவோமாக.
கீரையும் அதன் மருத்துவக்குணங்களும்-
ஏழைகளின் சொத்து என்று சொல்லப்படும் கீரைவிலை மலிவான சாதாரணப் பொருட்களிலும்நிறையப் பலன்கள் பெறமுடியும் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.
சில முக்கியகீரைகளின்பலன்கள் பின்வருமாறு:
அரைக்கீரை: தினமும் உண்ணக்கூடியகீரைவகைகளில் இது தன்மையானது. எல்லாநோயாளிகளும் உண்ணக்கூடியது.கண் பார்வைச் சிறப்பாக வைத்திருபதற்கு இந்தக்கீரைபயன்படுகிறது.இரத்தநாளங்கள், ஜீரண உறுப்புகளை நல்லநிலையில் பாதுகாப்பாகவைத்திருக்க இது ஒரு சிறந்தகீரை. பிரசவமானமகளிருக்கு உடனடியான் ஊட்டம் அளிக்கும் வல்லமை இந்தக் கீரைக்கு இருக்கிறது.
மணத்தக்காளிக்கீரை: வாயில் ஏற்பட்ட புண்,வயிற்றுப்புண் முதலியவற்றிக்கு கண்கண்டசஞ்சீவி என்று இக்கீரையைக் கூறுவார்கள்.மூலநோய், குடல் அழற்சி கட்டுப்படும். குரல்வளம் பெருகும். அல்சர் என்கின்ற நோய்க்குஅற்புத மருந்தாகும். வாரம் இரு முறை உண்ணக் கூடியகீரைகளில் இதுவும் ஒன்று.
பசளைக்கீரை: மலச்சிக்கலை விரட்டுவதில்வல்லது. ஆண்மையைப் பலப்படுத்தும் , குளிர்ச்சிதரும் கீரைகளில் இதுவும் ஒன்று. ஆனால்ஆஸ்துமா போன்றநொய் உள்ளவர்கள் இக்கீரையைக்கோடை காலத்தில் மட்டுமே
உண்ணவும்.
வெந்தியக்கீரை: இதில் புரதம், தாதுக்கள்,மற்றும் விட்டமின் சி முதலியன் அபரிதமாக இருக்கிறது.வாயுவைக் கண்டிக்கும் கல்லீரலைச்சுறுசுறுப்பாக்கும். வாரம் ஒருமுறை இக்கீரையை உண்டுவரமூட்டுவலி,இடுப்புவலி போன்றவை நீங்கும்.சிறுநீர்கோளாறு கிட்டவே வராது.
முளைக்கீரை: இக்கீரை எல்லா வயதினரும்தினம் சாப்பிடக்கூடியது. பசி இல்லாதவற்குபசியைத் தூண்டக்கூடிய கீரை. காசநோயின்போதுவரும் காச்சலைக்கட்டுப்படுத்தக்கூடியது.
அகத்திக்கீரை: இதில் வைட்டமின், இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து நிறைந்தது. விஷங்களை முறிக்கும். கண் பார்வை சம்பந்தப்பட்டநரம்புகளுக்கு வலுவூட்டக்கூடியது. வயிற்றில்உள்ளகிருமிகளைக்கொல்லக் கூடியது. ஆனால்வயிற்றுக்கோளாறு உள்ளவர்கள் வயோதிகர்உண்ணக்கூடாது. மாதத்தில் ஒரு முறை மட்டும்உண்ணத்தக்கது.
கரிசலாங்கண்ணி கீரை: இக்கீரை முதுமைத்தோற்றத்தைக்கட்டுப்படுத்தும். கண்பார்வை கூர்மையடையும். பல் நோய்கள் வராமல் தடுக்கக்கூடியது. இரைப்பையை வலுப்படுத்துவதில் சிறந்தது.
புளியாரைக்கீரை: காயகல்பத்திற்கு இணையானதுஎன வள்ளலாரால் பேசப்பட்டது. கபம், பித்தவாயுவைகண்டிக்கும் ஆற்றல் பெற்றது. மூல நோய்க்கும் நாட்பட்ட கிராணிக்கு இது மாமருந்தாகிறது.
எலுமிச்சம்பழத்தின் மருத்துவக்குணம்;
குறைந்த விலையில் நிறைந்த பயன் தரக்கூடிய பழவகைகளில் ஈடு இணையற்றது எலுமிச்சம்பழம். வாகடத்தில்இதை அரச கனி என்று கூறுவார்கள்.இதன் மருத்துவப்பலன்களைப் பெரிய பட்டியில் இட்டேக்
கூறலாம். அவையாவன:பித்தத்தைப்போக்கும். தலைவலியைத்தீர்க்கும், மலச்சிக்கலைப்போக்கும், தொண்டைவலியைப்போக்கும்,வாந்தியை நிறுத்தும், காலாராக்கிருமியை ஒழிக்கும்,பல் நோய்களைக்குணப்படுத்தும், டான்சில் வராமல்தடுக்கும்,விஷத்தைமுறிக்கும், தேள் கடிக்கு உதவும்,
வாய்ப்புண்ணை ஆற்றும்,மஞ்சள் காமாலையை நீக்கும், வீக்கத்தைக் குறைக்கும்,வாயுவை அகற்றும், பசியை உண்டாக்கும், விரல் சுற்றுக்கு நிவாரணமாகும், யானைக்கால் வியாதியைக்குணப்படுத்தும்.ஓட்டலில் அல்லது வெளிச்சாப்பாட்டுக்கடைகளில்சாப்பிடுபவர்கள் சுத்தம் அற்ற, நன்றாக வேகாதசமையலை உண்பதால் ஏற்படக்கூடிய வயிற்றுத் தொல்லையில் இருந்து விடுபட இரண்டு எலுமிச்சம்பழச் சாற்றுடன் நல்ல பெருங்காயத்தூள் கொஞ்சம், சிறிதுஉப்பு சேர்த்து தினம் குடித்து வருவது பெரும்நன்மையை அளிக்கும்.அணுக்குண்டு சோதனைகள் நடத்துவதால் நீரிலும்காற்றிலும் ஏற்படும் கதிரியக்க அபாயத்தைத்தடுக்கும் ஆற்றல் எலுமிச்சம்பழத்தொலில் உள்ளப்யோபிளேன் என்ற சத்தில் இருக்கிறது. அதனால்தினமும் எலுமிச்சம்பழம் சாப்பிடுபவர்கள் கதிரியக்கத்தைத் தாங்கிக்கொண்டு தப்பி உயிர் வாழ முடியும்.புற்று நோயாளர்களுக்கு எக்ஸ்ரே சிகிச்சையால் ஏற்படும் கதிரியக்கத்தீங்கை எலுமிச்சம்பழம் தடுக்கிறது. விளையாட்டு, ஓட்டப்பந்தயம், கடுமையான வேலை,இவற்றால் ஏற்படும் களைப்பை நீக்க ஒரு எலுமிச்சம்பழத்தை எடுத்து உடனடியாக கடித்துச் சாற்றையோஅல்லது பழத்தைபிளிந்து சாற்றுடன் சர்க்கரை சேர்த்துக் குடித்ததும் களைப்பு நீங்கி தெம்பு ஏற்படும்.உண்ணாவிரதம் இருப்பவர்கள் அவர்களின் உண்ணாவிரதத்தை முடிக்க எலுமிச்சம்பழச்சாறு கொடுப்பதை நீங்கள் அறிவீர்கள். இதற்குரிய காரணம் உண்ணாவிரதத்தை விட்டு மறுபடி உண்ணு முன் எலுமிச்சம்பழச்சாற்றை அருந்தி அதன் பின்பு உண்டால்தான்
சீரணப்பிரச்சினைகள் தோன்றுவதைத்தடுக்கமுடியும்.
சீரகத்தின் மருத்துவக்குணம்;
பலர் நினைப்பது போல் சீரகம் உணவில் வாசத்திற்காக சேர்க்கப்படுவதில்லை. 25 ம்கும் மேற்பட்டநோய்களைத்தீர்க்க சீரகம் பயன்படுத்தப்படுகிறது.சீரகத்தில் ஏழு வகைச்சீரகம் உண்டு. அவையாவனநற்சீரகம், பெருஞ்சீரகம்,கருஞ்சீரகம், காட்டுச்சீரகம்,பிலப்புச்சீரகம், நட்சத்திரச்சீரகம், செஞ்சீரகம் எனப்படும். இதில் பெருஞ்சீரகமும் நற்சீரகமும் மட்டுமேஎங்கள் உணவுப் பதார்த்தங்களில் பயன்படுத்தப்படுகின்றன.முக்கியமாக கீழ் வருபனவற்றைச்சீரகம் குணமாக்குகிறது.வாய் நாற்றத்தைப்போக்கும், வாய்ப்புண் குணமாகும், தொண்டைக்கட்டு நீங்கும்,நாக்குத்தடிப்பு நீங்கும், வாய் ஊறல் நிவர்த்தியாகும், இருமல் குறையும்,மார்புவலி குறையும், மூச்சுத்திணறல் நீங்கும்,மலக்கட்டு எடுபடும்,ஜீரணம் ஒழுங்காகும்,வயற்றுவலி நீங்கும்,சூதக வலி நீங்கும், சீதா பேதி குணமாகும்,பல் வலிகுறையும், எலும்பு பலமடையும்,உடல் வறட்சியை
போக்கும், வியர்வை நாற்றத்தைப்போக்கும், வாந்திகுமட்டலை நீக்கும்,பித்தமயக்கம், ஜுரம் தணியும்.கருஞ்சீரகம் நீரழிவு நோயைக் கட்டுப்படுத்தும் மருந்துகளில் சேர்க்கப்படுகிறது.மூத்திர எரிச்சலுக்கும் குளிர்ச்சிக்கும் கீழ்கண்ட முறையில் இந்தக்குடிநீரை ஒவ்வொருநாளும் தயாரித்துக்குடிக்கவும்.நாலு லிட்டர் தண்ணீரை நன்றாகக் கொதிக்க வைத்துவடிகட்டி எடுத்துக்கொள்ளவும். வடிகட்டிஎடுத்த கொதிநீரில் 50 கிராம் சீரகத்தைப்போட்டு மீண்டும் கொதிக்கவைத்து இறக்கி வைத்துவிடவும். இந்த நீரையே குடிநீராக எப்போதும் பயன்படுத்திவந்தால் மேலே சொல்லிய பலன்களில் பலவற்றைப்பெறலாம்சிறப்பாக மூத்திர எரிச்சலையும் ஜீரணம் இன்மையையும் இந்தக்குடிநீர் பூர்ணமாகக் குணமாக்கும்.
100 கிராம் சீரகம் எடுத்துக்கொண்டால் அதில் கீழ்கண்ட விகிதாசாரத்தில் சத்துக்கள் இருக்கின்றன.
புரதம். 18.7 கி,கொழுப்பு 15.0 கி,தாது உப்பு 5.8 கி,கார்போஹைரேட் 36.6 கி
சுண்ணாம்பு 511 மில்லி கிராம்,இரும்பு 310 மில்லிகிராம்,கரோட்டின் 522மிகிராம்
நையசின் 2.6 மில்லிகிராம்.,விட்டமின் சி 3.0 மில்லிகிராம்.
சீரகம் எங்கள் சமையலில் பங்குபற்றினாலும்இது ஒரு மருந்துச்சரக்கு என்பதைத்தெரிந்துகொள்ளுங்கள்.
எள்ளின் மருத்துவக்குணம்;
நீங்கள் உங்கள் உடல் பருமன் குறையவேண்டும் அதாவதுஉடல் இளைக்கவேண்டும் என்றாலும் அல்லது மெலிந்தஉடல் பருக்கவேண்டும் என்றாலும் கீழ் கண்டமுறையில்எள்ளைச்சாப்பிட்டால் நீங்கள் விரும்பிய பலனைப்பெறலாம்.கலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் காப்பி அல்லதுதேநீர் குடியாமல் 20 கிராம் கறுப்பு எள்ளை மென்று தின்றுதண்ணீர் குடிக்கவேண்டும். (3) மூன்று மணி நேரம் வேறுஎதுவும் சாப்பிடாமல் இருக்கவேண்டும். இப்படிச்சாப்பிட்டால் ஒரு மாதத்தில் பலன் தெரியும்.
 குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் (மூத்திரம்) கழிக்கும்பழக்கத்தை நிற்ப்பாட்ட இரவில் வெண்முள்ளங்கியுடன்எள் சேர்த்துச்சாப்பிடக்கொடுத்து வர அந்தப்பழக்கம் இல்லாமல் போய்விடும். மூலநோயால் அவதிப்படுபவர்கள் அதிலிருந்து விடுபடக்கீழே சொல்லியபிரகாரம் எள் வைத்தியம் செய்தால் குணமாகும்.
எள். ----------- 5 கிராம்
ஆட்டுப்பால். 5 கிராம்
சர்க்கரை. . 5 கிராம்
எள்ளை விழுதாக்கிக்கொண்டு அதனுடன்ஆட்டுப்பாலும்சர்க்கரையும் சேர்த்து ஒன்றாகக்கரைத்துக் குடித்து  வந்தால் பலன் தெரியும்.பற்க்கள் பலவீனமாக இருந்தால் அதை நிவர்த்தி செய்யதினமும் காலையில் ஒரு கைபிடி எள் சாப்பிட்டு வந்தால்பற்க்களின் பலவீனம் நீங்கி பல் பலப்படும் அதனால் பற்க்களின் வீழ்ச்சியைத்தடுத்து நிறுத்தலாம்.
தொழுநோய் குணமாக எள்ளைக்கீழ் கண்டமுறையில்சாப்பிட்டு வரப்பலன் கிடைக்கும்
எள் ------- ------ 5 கிராம்
உப்பு ------------ 5 கிராம்
மிளகாய் ------ 5 கிராம்
மூன்றையும் லேசாக வறுத்து இடித்து பின் அதைச்சலித்துஎடுத்து ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ளுங்கள்.காலை மாலை இரு வேளையும் இரண்டு சிட்டிகை அளவுபொடியை அரைத்தேக்கரண்டி பசு நெய்யில் குழைத்துச்சாப்பிடவேண்டும். இப்படி 21 நாட்கள் உண்டு வந்தால் பலன் தெரியும். மருந்து என்று சாப்பிடுங்காலங்களில் பாவற்காய் சாப்பிடுவதைத் தவிர்க்கவேண்டும்.
அவரையின் மருத்துவக்குணம்
கொடிவகைகாய்களில் சிறந்தது அவரைக்காயாகும்.சிக்கனமானவிலையில் நிறைந்த ஊட்டச்சத்தை இந்தஅவரைக்காய் தருகிறது.இதில் சுண்ணாம்புச் சத்து,இரும்புச்சத்து, புரதச்சத்துமற்றும் சில விட்டமின் சத்துகளும் ஒரே இடத்தில்கிடைக்கும் காய் அவரைக்காயாகும். இதில் பிஞ்சுக்காயே சிறந்ததாகும்.மிகஎளிதில் செமிக்கக்கூடியகாய்களில் அவரையும்ஒன்று. அதனால் பலவீனமானகுடல் உள்ளவர்களும்மத்தியான நேரத்திலும் இரவுநேரத்திலும் இதை உண்ணலாம்.வெண்மையான அவரைகாய் வாயுவையும் பித்தத்தையும் கண்டிக்கவல்லது. இது உள்ளுறுப்புகளின் அளர்ச்சியையும் எரிச்சலையும் போக்கும் தன்மை உள்ளது.இதைஉணவில் சேர்த்து உண்பதால் நீரழிவு நோய், பேதியாகும்தொல்லை, அடிக்கடி தலை நோய் வருதல், ஜீரணம் சம்பந்தப்பட்ட கோளாறு முதலியவற்றைக் கட்டுப்படுத்தும்என்று வைத்தியநூல்கள் கூறுகின்றன.அண்மைய ஆராய்ச்சிகளின்படி இரத்தக்கொதிப்பைக் கட்டுப்படுத்தும் சக்தி அவரைக்காய்க்கு உண்டு என்று கண்டுபிடித்துள்ளார்கள்.
தாது புஷ்டி என்பது தாம்பத்திய உறவுக்குத்தேவையான ஆண்மையைப் பெருக்குவதாகும்.தாதுபுஷ்டியைப்பெருக்கும் வைத்தியமுறைக்குத் தேவையானவை:-
பாதாம் பருப்பு. 225 பருப்புகள்.
சுத்தமான தேன். 500 மில்லி லிட்டர்
இந்த வைத்தியமுறையைத்தொடங்குமுன்பு சுகபேதி அல்லதுஏதாவது ஒரு Natural Laxatives எடுத்துக் குடலைச்சுத்தம் பண்ணியபின்பு இந்த முறையை ஆரம்பிக்க வேண்டும். இந்த வைத்திய முறையில் ஒவ்வொரு நாளும் இரவில் கீழே சொல்லப்பட்டஎண்ணிக்கையில் பருப்புகளைச்சாப்பிட்டபின்பு மிளகு போட்டுக்காச்சிய பால் ஒருகப் எடுத்து இளஞ்சூட்டில் இரண்டு தேக்கரண்டி சுத்தமான தேன்கலந்து குடிக்கவேண்டும்.
பாதாம்பருப்பு சாப்பிடவேண்டியமுறை:
முதலாம் நாள் ஒரு பருப்பு மட்டும் சாப்பிட்டு த் தேன் கலந்த பால்குடிக்க வேண்டும்.இரண்டாம் நாள் இரண்டு பருப்புகள் சாப்பிட்டுத் தேன் கலந்த பால்குடிக்க்வேண்டும்.மூன்றாம் நாள் மூன்று பருப்புகள் சாப்பிட்டுத் தேன் கலந்த பால்குடிக்கவேண்டும்இப்படியே 4ம் நாள் நான்கு பருப்புகள், 5ம் நாள் அய்ந்து பருப்புகள்,6ம் நாள் ஆறு பருப்புகள், 7ம் நாள் ஏழுபருப்புகள், 8ம் நாள்எட்டு பருப்புகள், 9ம் நாள் ஒன்பது பருப்புகள், 10ம் நாள் பத்துப் பருப்புகள்,11ம் நாள் பதினொரு பருப்புகள், 12ம் நாள் பன்னிரண்டுபருப்புகள்,13ம் நாள் பதின்மூன்று பருப்புகள், 14ம் நாள் பதினாங்குபருப்புகள் 15ம்நாள் பதிநைந்து பருப்புகள் சாப்பிட்டுத் தேன்கலந்தபால் குடிக்கவேண்டும்16ம் நாளிலிருந்து ஒவ்வொரு பருப்பு குறைத்துச் சாப்பிடவேண்டும்.16ம் நாள் 14 பருப்புகள், 17ம் நாள் 13 பருப்புகள், 18ம் நாள் 12 பருப்புகள்,19ம் நாள் 11 பருப்புகள், 20ம் நாள் 10 பருப்புகள், 21ம் நாள் ஒன்பது பருப்புகள்,22ம் நாள் எட்டு பருப்புகள், 23ம் நாள் ஏழு பருப்புகள், 24ம் நாள் ஆறு பருப்புகள்,25ம் நாள் அய்ந்து பருப்புகள், 26ம் நாள் நான்கு பருப்புகள், 27ம் நாள் மூன்றுபருப்புகள்,28ம் நாள் இரண்டு பருப்புகள், 29ம் நாள் ஒரு பருப்புமட்டும் சாப்பிட்டு தேன்கலந்த பால் குடிக்கவேண்டும்.
30ம் நாள் தனிய தேன் கலந்த பால் குடிக்கவேண்டும்.இந்த முறையில் சாப்பிட்டால் இதை ஒரு Course என்பார்கள். இப்படிச்சாப்பிட்டு ஒரு வாரம் சென்ற பின்பு பலனை உணரமுடியும்.
இது பாட்டிவைதிய முறையாக இருந்தாலும் சித்த ஆயுர்வேத மருந்துகள் சாப்பிடுங்காலங்களில் கடைப்பிடிக்க வேண்டுய பத்திய முறைகளான பாவற்காய் தவிர்த்தல், அதிக உஷ்ணம் அதிக குளிர்ச்சி கூடியஉணவு வகைகள் தவிர்க்கப்படவேண்டும். மருந்து ஆரம்பித்தநாளிலிருந்து முடியும் நாள் வரை உடல் உறவு தவிர்க்கப்படவேண்டும்.பொதுவாகதாதுவைப்பெருக்கும் மருந்துகள் சாப்பிடுங்காலங்களில் பிரமச்சாரியம்என்று சொல்லப்படுகிற நிலை கண்டிப்பாககடைப்பிடிக்கப்படவேண்டும்.மறுபடி இப்படி ஒரு Course எடுப்பது நலன் தரும் எனக்கருதினால் முதல்Course முடிந்து 60 நாட்களின் பின்புதான் ஆரம்பிக்கவேண்டும்.ஒரு சிலருக்கு பாதாம்பருப்பு சாப்பிட்டால் உடல் நிறை அதிகரிக்கும் சாத்தியக்கூறு இருக்கிறது என்பதைக்கவனத்தில் கொள்ளவும்.
வயது வந்த ஆண்களுக்கு மட்டும்
16 வயதுக்கு மேற்பட்ட சகல ஆண்களும் அவர் கள் அணியும் உள் உடுப்பில் முக்கியகவனம் செலுத்தவேண்டும். Brief orBoxer என் பதில் தெளிவு இருக்க வேண்டும்.இறுக்க மான Briefஅணிவதால் உயிர் அணு உற்பத்தி குறைவடைவதாக வைத்திய ஆராச்சி அறிக்கைகள் தெரிவிக்கின்றன. Brief விதைகளைஉடலுடன் சேர்த்து இறுக்கிப்பிடிப்பதால் உடல் வெப்பநிலை விதைகளின் விந்து உற்பத்தியில் உயிர் அணுக்களின் உயிர்வாழும் நிலையைப் பாதிப்பதாகக் கண்டறிந்துள்ளார்கள்.Boxer அணியும் போது இந்நிலை தவிர்கப்படுகிறது.Boxer விதைகளின் சுதந்திர செயல்பாட்டுக்கு வழி விடுவதால்பாதிப்பு தவிற்கப்படுகிறது. ஆதிகாலத்தில் கச்சை அல்லது கோவணம் அல்லது கெளபீனம் அணியும் போது அவற்றைநனைத்து ஈரமாக்கிய பின்பே அணியும்படி அறிவுறுத்தினார்கள்.விதைகளை உடல் வெப்பம் தாக்காமல் இருக்கக்கூடிய உள்உடுப்பு அணிவதுஆண்மையைப்பாது காக்கும் என்பது முக்கியவிதியாகும்.
 நாட்பட்ட வறட்டு இருமல்
சிலபேருக்கு வரட்டு இருமல் தொடர்ந்து கொண்டேஇருக்கும். இவர்களுக்கு பாட்டி சொன்ன வைத்தியம்
தேவையான மருந்துச்சரக்குகள்.
மல்லி ...... ஒரு கைய் சிறங்கை அளவு.
இஞ்சி...... ஒரு சின்னத்துண்டு
பனங்கற்கண்டு... ஒரு கைய் சிறங்கை அளவுமல்லியை முதலில் சிறிது நொறுக்கி வைத்துக்கொள்ளுங்கள்.இஞ்சியின் தோலை நீக்கி தட்டி ஒரு கப்பில் போட்டு வைத்துக்கொள்ளுங்கள். அடுப்பில் தண்ணிரைக் கொதிக்க வையுங்கள்தண்ணீர் நன்றாகக் கொதித்த தும் இஞ்சி தட்டிப்போட்ட கப்பினுள் மல்லி பனங்கற்கண்டு இரண்டையும் போட்டு கொதி நிலையிலுள்ள கொதிநீரை ஊற்றி மூடி வைத்துவிடுங்கள். நன்றாகஆறிய பின்பு அந்த கஷாயத்தை வடிகட்டி காலை, மாலைமறு நாள் காலை என மூன்றே மூன்று வேளை சாப்பிடவும்.அப்படிச்சாப்பிட்டால் இந்த நாட்பட்ட வறட்டு இருமல் காணாமல்போய்விடும் என்று பாட்டி சொல்லியுள்ளார். நாங்களும்முயற்சிப்போம் பயன் பெறுவோம்.
மதுமேகம் என்னும் நீரழிவு நோய்
பல நோய்கள் ஆங்கில வைத்தியத்திற்குக் கட்டுப்படுவதில்லை.ஆனால் சில பாட்டி வைத்திய முறைகள் ஆச்சரியப்படும்படிநோய்கள் முற்றாகக் குணமான சம்பவங்கள் ஏராளமாக இருக்கின்றன.பெரும்பாலும் ஆங்கிலவைத்தியத்தில் எங்கள் மக்கள்வைத்துள்ள நம்பிக்கையில் பத்துச்சதவீதங்கூட தமிழரின்
பண்டைய வைத்தியமான சித்தவைத்தியத்தில் வைப்பதில்லை.அந்த சித்த வைத்தியத்தின் ஒரு துளிதான் எங்கள் பாட்டிமார்கூறிய கை வைத்தியம்.நீரழிவு நோயைக் கட்டுப்படுத்தப் பாட்டி சொல்லும் வைத்திய
முறையைப் பார்ப்போம்.
தேவையான மருந்துச்சரக்குகள்.
கோதுமைநொய்..............100 கிராம்
பார்லி அரிசி............... 100 கிராம்
கருஞ்சீரகம்............... 100 கிராம்
கருவேலம் பிசின்....... 100 கிராம்
இவை நான்கையும் ஒரு பாத்திரத்தில் போட்டு ஏழு கப்தண்ணீர் சேர்த்துக் கொண்டு நன்றாக எரியும் அடுப்பில்ஏற்றி பத்து நிமிடங்கள் கொதிக்கவிடவும். பதினோராவதுநிமிடம் அந்தக் கஷா யத்தை அடுப்பை விட்டு இறக்கி ஒருபக்கத்தில் வைத்துவிடவும்.நன்றாக ஆறி குளிர்ச்சி யடைந்த கஷாயத்தை ஏழு பங்காகப்பகிர்ந்து வைத்துக்கொள்ள்வும்ஒவ்வொரு நாளும் காலையில் வெறும் வயிற்றில் ஒருபங்கைச்சாப்பிடுவும்.ஏழு நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டபின்பு மறுபடியும் முன் போல் கஷாயத்தை தயாரிக்கவேண்டும். இரண்டாவது தயாரித்த கஷாயத்தைமுன் போல்எழு பங்காக்கி ஒன்றுவிட்டு ஒரு நாள் சாப்பிடவும்.அதன் மேல் அந்த கஷாயம் சாப்பிடும் தேவைஏற்படாது என்பதுபாட்டி சொல்லும் வார்த்தையாகும். நாங்களும் முயன்று நோயைத் தீர்ப்போமே.

0 comments:

Post a Comment

 
வாரந்தோறும் கூட்டுப்பிராத்தனை!!
நமது இனையதளத்தில்!!
Click here...